Close
ஏப்ரல் 24, 2026 10:38 காலை

ஈரோடு பார்மசி  கல்லூரியில் உலக தாய்பால் வார விழா

ஈரோடு

ஈரோடு பார்மசி கல்லூரியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வாரவிழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு பார்மசி  கல்லூரியில் உலக தாய்பால் வார விழா நடைபெற்றது.

விழாவில், ஈரோடு ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்  பி. சாந்தி  மற்றும் ஏகம் அறக்கட்டளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன்ராஜ் ஆகியோர்  வளர் இளம் பெண்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்துரையாற்றினர்.

இதில், திண்டல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கார்த்தி,  வச்சரவேல்,  கல்லுரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த  கருத்தரங்கம் மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது என மாணவிகள் கருத்து தெரிவித்தார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top