Close
செப்டம்பர் 20, 2024 6:27 காலை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை

தமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம்,  மார்த்தாண்டத்தில்,  ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெற்ற, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் விவரம்:

மதிப்புறுத் தலைவராக சு.வெங்கடேசன் எம்.பி, மாநிலத் தலைவராக மதுக்கூர் இராமலிங்கம்,பொதுச் செயலாளராக ஆதவன் தீட்சண்யா,பொருளாளராக சைதை ஜெ. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலத் துணைத் தலைவர்களாக…
ச.செந்தில்நாதன், நந்தலாலா, ரோகிணி, நா.முத்துநிலவன்,
ஆர்.நீலா, மயிலை பாலு ஆகியோரும்.

துணைப் பொதுச் செயலாளர்களாக…
கே.வேலாயுதம், அ.இலட்சுமிகாந்தன், களப்பிரன், க.பிரகதீஸ்வரன், வெண்புறா, ஆர்.உமா (புதுச்சேரி)
ஆகியோரும்.

துணைச் செயலாளர்களாக…
ம.மணிமாறன், ஸ்ரீரசா, மருதுபாரதி, கி.அன்பரசன்,
அ.கரீம், ஏகாதசி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 21 பேர் உள்ளிட்ட 141 பேர்களைக் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top