Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

கவிஞர் தங்கமூர்த்தி பிறந்த நாள் விழா..

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற கவிஞர் தங்கம்மூர்த்தி பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை திருக்கோர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள், பத்திரிகை, நண்பர்கள் வர்த்த நண்பர்கள் மாணவர்கள் மத்தியில் கவிஞர் தங்கம் மூர்த்தி கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்.
விழாவிற்கு வருகை தந்த கவிஞரையும் துணைவியாரையும் பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.  ஆசிரியைகள் பிறத்த நாள் வாழ்த்துப் பாடல்கள் பாடினர். ஆசிரியர்கள் உதயகுமார், கனியன் செல்வராஜ், காசாவயல் கண்ணன் ஆகியோர் வாழ்த்துக் கவிதை வாசித்தனர்.

புதுக்கோட்டை

தமிழினி புலனக்குழு நிறுவனர் சுபாஷ் காந்தி  19  கிலோ எடையுள்ள  கேக் கொண்டு வந்து சிறப்பித்தார். விழாவில் அனைவருக்கும் பேராசிரியர் கருப்பையா சிற்றண்டி வழங்கினார். முன்னதாக பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவி தங்கம்மூர்த்தி வரவேற்றார். துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார்.
விழாவில் தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு தங்கம் மூர்த்தியை வாழ்த்தினர்.   ஏற்பாடுகளை மேலாளர் ராஜா ஒருங்கிணைப்பாளர் பவானி, ஆசிரியர்கள் ராமன் உதயகுமார் ஆகியோர் செய்திருந்திந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top