Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

புதுக்கோட்டை   விஜயபுரம்  அருள்மிகு பழனி ஆண்டவர்  கோயிலில்  கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை   விஜயபுரம்  அருள்மிகு பழனி ஆண்டவர்  கோயிலில்  நடைபெற்ற கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை அருகிலுள்ள , விஜயபுரத்தில்  அருள்மிகு பழனி ஆண்டவர் கோயிலில்  கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

இதையொட்டி   யாகபூஜைகளை சிவாசாரிகள் தொடக்கி வைத்தனர். பின்னர்    நவக்கிரக ஹோமம், கோபூஜை மகாலட்சுமி ஹோமம்,  மகா பூர்ணாஹுதியும், தீபாராதனை, நடைபெற்றது.  தொடர்ந்து ,  யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது .

அரவிந்த்சர்மா முன்னிலையில்  கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்     நடைபெற்றது.   ஆலயத்தில் மூலவர்   அருள்மிகு பழனி ஆண்டவருக்கு  கலச புனித நீர்அபிஷேகம்  தீபாராதனை  நடந்தது.

பின்னர்  சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு   பழனி ஆண்டவர் அருள்பாலித்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ,    அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்.எல்.ஏ – முத்துராஜா, பல்வேறுத்துறை அதிகாரிகள், அரசிய கட்சி பிரமுகர்கள், பஞ்சாயத்து தலைவர்கள்   மற்றும் .உள்ளாட்சி பிரதிநிதிகள்,  அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.  விஜயபுரம் வாகவாசல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  பக்தர்கள்   வருகைதந்துவழிபட்டனர். இதையொட்டி நடைபெற்ற  அன்னதானத்தில்   அனைவரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top