Close
மார்ச் 7, 2026 1:26 மணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நடைப்பயணம்

அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நடைப்பயணம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்  நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்புக் குழு சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்திற்கு, கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.

பேரணியில் 65 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கி, லத்துவாடி வரை சென்று, பின்னர் மீண்டும் கல்லூரி நுழைவு வாயிலில் பேரணி நிறைவடைந்தது.

விழிப்புணர்வு நடைப்பயணத்தின் போது, போதைப்பொருள் பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், இருதய நோய்கள், பக்கவாதம், உதடு, நாக்கு, ஈறு, தொண்டைப் புற்றுநோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் மனநல பாதிப்பு, மனச்சோர்வு, கவலை போன்ற பிரச்சினைகளும் தோன்றுகின்றன என்றும், போதைப்பொருள் பயன்பாட்டின் விளைவாக வேலை இழப்பு, குடும்பச் சிக்கல்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற சமூகப் பிரச்சினைகளும் உருவாகின்றன என்பதை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் ராஜசேகர பாண்டியன், போதைப்பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பார்வதி மற்றும் உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top