நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் டாக்ட் செந்தில். 48 வயதான இவர், கால்நடை மருத்துவத்தில் பி.வி.எஸ்சி., டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
கோழித்தீவன உற்பத்தி மற்றும் முட்டை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வரும் அவர் தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளராகவும், ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போது டாக்டர் செந்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் ஒப்புதலின் பேரில், ஏஐசிசி பொதுச்செயலாளர் வேனுகோபால் எம்.பி., இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் செந்திலுக்கு திரளான காங்கிரசார் மற்றும் பிரமுகர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.




