Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

நாமக்கல்லில் கலை சங்கமம் கலாச்சார விழா: பரிசு வழங்கிய அமைச்சர், எம்.பி.

நாமக்கல்லில் நடைபெற்ற கலை சங்கமம் கலாச்சார விழாவில், அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி, ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில், நாமக்கல்லில் பொங்கல் விழாவையொட்டி, கலை சங்கமம் கலாச்சார விழா நடைபெற்றது. நாமக்கல் ஆர்டிஓ சாந்தி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் பிரபு வேணுகோபால் வரவேற்றார். நாமக்கல் எம்.எம்.ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நியமன கவுன்சிலர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைக்குழுவினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்கள்.

விழாவில் நாமகிரிப்பேட்டை கமல் குழுவினர் மங்கல இசை, பெரிய சோழிபாளையம் சுரேஷ் குழுவினர், துத்திக்குளம் பாண்டியன் குழுவினர், சிவியாம்பாளையம் கண்ணன் குழுவினர், குருசாமிபாளையம் தங்கம் ஆகிய குழுவினரின் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வக்குமார், ராஜவேல், அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வசீராளன், பசுமை சிவக்குமார், கவிஞர் நூலக வாசகர் வட்ட தலைவர் மோகன், பல பட்டறை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் இளங்கோவன், நாடக நடிகர் வானதி கதிர் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top