Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

வக்பு வாரியக் கல்லூரி சார்பில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம்

மதுரை, வக்பு வாரியக் கல்லூரியில், டாக்டர் மோகன் நீரழிவு நோய் சிறப்பு மருத்துவமனை மற்றும் விலங்கியல் துறை வக்பு வாரியக் கல்லூரி சார்பில், இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் விலங்கியல் துறை ஆய்வகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.
நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவருமான ஷாசுலி இப்ராஹிம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில், விலங்கியல் துறைத் தலைவரும் முனைவருவமான மும்தாஜ் முன்னிலை வகித்தார்.
இதில், பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், பேராசிரியைகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் பங்கேற்று, சர்க்கரை பரிசோதனைகள் செய்து கொண்டனர். பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top