Close
ஏப்ரல் 23, 2026 11:33 மணி

குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் காலபைரவர் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்பகுதியில் 36 அடி உயர குகை வடிவிலான 18 சித்தர்களுடன் தியான மண்டப அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது

இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு கால பைரவருக்கு அஷ்டமி பூஜையும் சிறப்பு அலங்காரமும், ஆடி மாத முதல் வார வெள்ளி முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக டிரஸ்ட்டி கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top