Close
ஜூன் 7, 2025 5:34 காலை

பேரையூர் பேரூராட்சி தலைவர் மறைவு, அனைத்து கட்சியினர் அஞ்சலி

மதுரை அருகே, பேரையூர் பேருராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கே.குருசாமி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சோகம் – 2001 முதல் தொடர்ந்து 4 வது முறையாக பேரூராட்சி தலைவராக பணியாற்றி வந்த இவரது மறைவிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தவர் கே.கே.குருசாமி ( வயது – 71), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.,

2001 முதல் தற்போது வரை தொடர்ந்து 4 வது முறையாக பேரையூர் பேரூராட்சி தலைவராக பணியாற்றி வருகிறார்., கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவரது பதவி காலம் 2026ம் இறுதியில் முடிவடைய உள்ளது.,

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கிளை தலைவர் முதல் மாவட்ட பொறுப்புகள் வரை பல்வேறு பொறுப்புகளில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியுள்ளார். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக தற்போது எந்த பொறுப்பிலும் வகிக்க வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இவரது உடல் பேரையூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று 06.05.2025 நல்லடக்கம் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.,

பேரூராட்சியில் தொடர்ந்து 4 முறை தலைவராக பதவி வகித்து மக்களிடம் நற்பெயர் பெற்ற கே.கே.குருசாமி மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top