இயற்கை வேளாண்மை குறித்து, நாமக்கல்லில் வருகிற 19ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 19ம் தேதி காலை 10 மணிக்கு, அங்கக வேளாண்மை என்ற தலைப்பில், 1 நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.
பயிற்சியில், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம். திட மற்றும் திரவ நொதித்த இயற்கை எரு பயன்படுத்துதல், அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள், பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், மீன் அமிலம், பண்ணைக் கழிவுகளான ஆடு, மாடு தொழுவத்தின் கழிவுகள், களைகள், கோழிஎரு, தென்னை நார்கழிவு, பார்தீனிய களைச்செடிகள் ஆகிய எளிதில் மட்கக்கூடிய கழிவுகளை மறுசுழற்சி செய்ய நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் பயன்படுத்துதல், அங்கக முறையில் பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, மண் மூடாக்கு அமைத்தல், பயிர் சுழற்சி முறைகள், இயற்கை முறை களை கட்டுப்பாடு, நவதானியம் விதைத்தல் போன்றவை குறித்து தெளிவாக விளக்கமும், செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.
பயிற்சியில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள்; ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 40 விவசாயிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆர்வம் உள்ள அனைவரும் 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு 18ம் தேதி மாலை 5 மணிக்கும் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கேவிகே தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.