Close
ஏப்ரல் 23, 2026 11:31 மணி

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மண்டல அபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் ஐயப்ப சுவாமிகோயிலில் நடைபெற்ற, மண்டல பூஜையில், சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் ஐயப்ப சுவாமி கோயிலில் 60-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மண்டல அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஐயப்ப சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலின் 60ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த டிச.5-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலில் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் கொண்டு வந்து கொடுத்த நெய்யைக் கொண்டு, உற்சவர் மற்றும் மூலவர் ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் அபிஷேகமும் நடைபெற்றது.

இதையடுத்து சுவாமி சிறப்பு தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top