திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கைத்தறி துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
ஆரணி எம். பி., தரணிவேந்தன் மற்றும் கைத்தறி நூல் துறை அரசு செயலாளர் அமுதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்து 1358 நெசவாளர்களுக்கு ரூ.5 கோடி 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கைத்தறி உபகரணங்கள் மற்றும் நெசவாளர்களுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் வழங்கினர்.
பின்னர் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது;
கைத்தறித் துறை அமைச்சா் இத்திட்டத்துக்கு தற்போது ரூ.44.69 கோடி ஒதுக்கியுள்ளாா். இனி வரும் காலங்களில் மேலும் நிதி ஒதுக்கப்பட்டு சிறப்பான முறையில் திட்டத்தை அமைச்சா் செயல்படுத்துவாா்.
தொல்லியல் துறை மூலம் கண்பிடிப்பு நடைபெற்று வரும் கீழடியில் கீழடி உருவாக்கியது பொதுப்பணி துறை அதன் அமைச்சர் நான் பலமுறை சென்று இருக்கின்றேன். கீழடியில் புதையல் கண்டெடுக்கபட்ட பொருள் மண்வெட்டி,கொலு உமி, ஆடைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கீழடியில் உள்ள அருட்காட்சியகத்தில் ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றில் விவசாய தொழிலும் மட்டுமல்ல நெசவு தொழிலும் அந்த காலத்தில் கண்டெடுக்கபட்டுள்ளன. இந்த கீழடியை ஒப்பிட்டு பார்க்கும்போது ஆதி காலத்து முதலே தமிழர்கள் நெசவுத் தொழில் செய்து வந்துள்ளனர் என தெரிகிறது என பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சா் காந்தி பேசியதாவது:
கைத்தறி நெசவு நடவடிக்கைகளை, குறிப்பாக, பட்டு உற்பத்தியை மையப்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெசவாளா்களின் வருமானம் ரூ.500-லிருந்து ரூ.1,000 வரை அதிகரிக்கும். குறைந்த விலையிலான பட்டுப் புடவைகளுக்கான உற்பத்தி நேரத்தை குறைக்கவும். இந்தத் திட்டம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இது ரூ.7000 முதல் ரூ.15,000 வரையிலான பட்டுச் சேலைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும். மேலும், நெசவாளா்களின் வாழ்வாதாரம் மேம்பாடையும்.
நெசவாளா்களுக்கு இலவச வீடு, அவா்கள் வங்கியில் பெற்ற கடனுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.
விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவா் பிச்சாண்டி, ஆரணி எம்.பி. தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் ஜோதி (செய்யாறு), அம்பேத்குமாா் (வந்தவாசி), கைத்தறி துறை கூடுதல் இயக்குநா் தமிழரசி, இணை இயக்குநா் கணேசன், திட்ட ஆலோசகா் ராமநாதன், உதவி இயக்குநா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலா்கள், மாவட்ட செய்தி தொடா்பாளா் கௌரிசங்கா் மற்றும் ஆரணி பட்டுசேலை உற்பத்தியாளா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.




