Close
மார்ச் 7, 2026 2:33 மணி

சேந்தமங்கலம் பகுதியில் 19ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில் நாளை 19ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை 19ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் மற்றும் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top