Close
மார்ச் 7, 2026 4:26 மணி

அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய பகுதியில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் மூர்த்தி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சால்வார்பட்டி, வாவிடமருதூர், 15 பி மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில், அமைச்சர் பி மூர்த்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் பி மூர்த்தி பேசியதாவது: இந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று பெண்களின் ஆதரவு திராவிட மாடல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அமோகமாக உள்ளது.

அதற்கு காரணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து, பயணம் மகளிர் குழுக்களுக்கான கடன் உதவி தள்ளுபடி, கல்லூரி பெண்களுக்கான கல்வி உதவித்தொகை, பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கான சீருடை மற்றும் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

வருகின்ற 2026ல் திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின்  தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராகவும் இளம் தலைவர் உதயநிதி துணை முதலமைச்சராகவும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவார்.

மேலும் உங்கள் பகுதியில் நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளுக்கான முகாமினை கிராம மக்கள் தவறாக பயன்படுத்த வேண்டும். இந்த முகாமில், 15 துறை அரசு அதிகாரிகள் மக்களை தேடி வந்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற உள்ளனர்.

தங்களுக்கு தேவையான நலத்திட்டங்களையும் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இந்த முகாமினை பொதுமக்கள் தவறாது பயன்படுத்த வேண்டும் . மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளான மின்சாரம் பட்டா மாறுதல் மகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பட வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், முத்தையன், அருண்குமார், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி, நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், தர்மராஜா, வாவிடமருதூர் கார்த்தி, அர்சுணன். சந்தன கருப்பு, சதீஷ் ராகுல். பன்னைகுடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனுஷ்கோடி. சர்கரை ஆலை மேட்டுப்பட்டி. மச்சக் காளை, ரவி, பிரவின், ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன் ராதாகிருஷ்ணன்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தெத்தூர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top