நாமக்கல் நகரில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்களை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாரின், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு, செல்லாண்டியம்மன் கோயில் அருகில் ரூ. 16 லட்சம் மதிப்பில் ஒரு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
மேலும், நாமக்கல் மாநகராட்சி 36வது வார்டு ச.பே.புதூரில் ரூ. 16 லட்சம் மதிப்பில் மற்றொரு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அங்கன்வாடி மையங்களின் திறப்பு விழா எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, திமுக தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர்கள் நந்தினி தேவி, இளம்பரிதி, செல்வக்குமார், டாக்டர் விஜய் ஆனந்த் உட்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.




