Close
ஏப்ரல் 24, 2026 12:40 காலை

நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கான பயிலரங்கம்

நாமக்கல்லில் நடைபெற்ற, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கான பயிலரங்கில் பேசிய சங்க நிறுவன தலைவர் மாயவன்

நாமக்கல்லில், பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாககிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, நாமக்கல் மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். சங்கத்தின் நிறுவன தலைவர் மாயவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்தாபனமும் இயக்க வரலாறும் என்ற தலைப்பில் பேசினார்.

மாநில தலைவர் ஜெயகுமார் இயக்கமும், இயக்குதலும் என்ற தலைப்பிலும், மாநில பொதுச்செயலாளர் குமரேசன் தொழற்சங்கமும் கோரிக்கைகளும் என்ற தலைப்பிலும், சட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமைப் பண்பு பயிற்சி குறித்தும் பேசினார்கள்.

மாநில துணைப் பொதுச்செயலாளர் மாயகிருஷ்ணன், துணைத்தலைவர் முருகன், செயலாளர் அசோகன், தனிக்கையாளர் கணேஷ்ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

இந்த பயிலரங்கத்தில் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top