Close
மார்ச் 7, 2026 1:34 மணி

சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஆட்சியரிடம் மரப்பரை கிராம மக்கள் கோரிக்கை

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மனு அளிப்பதற்காக, மரப்பரை பஞ்சாயத்து மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்திருந்தனர்.

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேரி மரப்பரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மரப்பரை பஞ்சாயத்து பொதுமக்கள், நாமக்கல்ஆட்சியரிடம் வழங்கியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மரப்பரை பஞ்சாயத்தில் உள்ள எங்கள் குடியிருப்பில் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடிநீர் வசதிக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

நாள்தோறும் மேல்நிலை குடிநீர் தொட்டி நிரப்பப்பட்டாலும், எங்கள் பகுதிக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. குடிப்பதற்கான நல்ல தண்ணீர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே விடப்படுகிறது.

குடிநீர் இணைப்பு இருந்தபோதும் 20 நிமிடம் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தபோதும் சீரானா குடிநீர் விநியாகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top