Close
ஏப்ரல் 24, 2026 1:05 காலை

உத்தப்ப நாயக்கனூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உத்தப்ப நாயக்கனூரில் உள்ளஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பொருட்கள் மற்றும் சேலை வழங்கபட்டது

உத்தப்பநாயக்கனூரில் உள்ள மனிதநேய மகாத்மா ஜோதி சேவை மையத்தில் தலைவர் மல்லிகா தலைமையில் ஆதரவற்ற நிலையில் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்

அவர்களுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிவி கதிரவன் ஆணைக்கிணங்க தொழிற்சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் திருப்பதி, தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன.ஆதிசேடன் தலைமையில் ஏழை எளியவர்களுக்கு அரிசி சிப்பம், வேட்டி, சேலை, பிஸ்கெட் பெட்டி சீனியப்பா டிரேடர்ஸ் சார்பாக அரிசி சிப்பம்,  அன்பு சார்பாக அரிசிசிப்பம் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top