Close
மார்ச் 7, 2026 2:56 மணி

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள்: அமைச்சர் ஆய்வு

வகுப்பறை கட்டிடம் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்களை ஆய்வு செய்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் அரசவெளி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் மாணாக்கர்கள் தங்கும் விடுதி கட்டும் பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அரசவெளி கிராமத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக பள்ளி மாணக்கர்கள் தங்கும் விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதியதாக பள்ளி கட்டடம் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல் வளர்ச்சி பணிகள் அனைத்தும் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடியுங்கள் விரைந்து பணிகளை முடித்தவுடன் பழங்குடியினர் நல மக்களுக்காக வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன் , மு.பெ.கிரி, ஆகியோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசவெளி கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி , அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் சமையல் கூடத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு உணவு தரமாக வழங்கப்படுகிறதா என்பதை உணவினை உண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் குணிக்காந்தூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்எப்ஆர்டி மேல்நிலைப் பள்ளியிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, ஆதிதிராவிடர் (பொ) மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் ராம்பிரபு, தாட்கோ மேலாளர் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ரேணுகோபால், ஒன்றிய செயலாளர்கள் கேசவன், சிவசேமன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top