Close
ஏப்ரல் 24, 2026 1:06 காலை

கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

ஆடிபௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடி பௌா்ணமி வரும் வெள்ளிக்கிழமை (ஆக.8) அன்று வருவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறத்து அரசு துறைச் சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

பௌா்ணமியையொட்டி அருணாசேலஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் வருவாா்கள்.

ஆட்டோக்கள் மூலம் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிா்க்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூரிலிருந்து வருகிற ஆட்டோக்கள் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்  வாகனத் தணிக்கை

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாநகராட்சி உட்பட்ட முக்கிய பகுதிகளான அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து காவல்துறையினர் என கூட்டாக இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது சாலைவரி, இன்ஷூரன்ஸ், பொல்யூஷன் சர்டிபிகேட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய மினிலாரி, ஆட்டோ, டாட்டா ஏஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோட் ஸ்டிக்கர் வழங்கப்பட்டு வருகிறது, இந்த கியூ ஆர் கோட் இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களை கண்டறிந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் வைத்து ஆவணங்கள் சரி பார்த்து மீண்டும் உரிமையாளர்களுக்கு வாகனத்தை வழங்கியும், ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் டாடா ஏஸ் வாகனங்களுக்கு பறிமுதல் செய்யப்பட்ட இடத்திலேயே 1000 ரூபாய் அபராதம் விதித்து பணம் வசூலிக்கப்பட்டது.

மேலும் மீண்டும் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை முழுமையாக பறிமுதல் செய்யப்படும் என்றும், வெளியூர் ஆட்டோக்கள் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை மாநகரக்குள் இயக்க வேண்டாம் எனவும், உத்தரவு மீறி இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று உரிமையாளர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top