நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்கம் சார்பில், தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை வகித்தார். சங்க தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்க கவுரவ தலைவர்கள் பத்ரிநாராயணன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகவரி துறை உதவி கமிஷனர் யாதவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதால் உண்டாகும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில், நாமக்கல்லைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வணிகர்கள், தங்களை வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.




