Close
மார்ச் 7, 2026 1:27 மணி

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள திரளி கவுண்டர் சோனை வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சீலைக்காரி அம்மன், ஸ்ரீ பெரிய கருப்பணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் வாஸ்து பூஜை அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு கால யாகவேள்வி பூஜைகளுடன் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாராகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் சுவாமி சிலைகள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அ.மீனாட்சிபுரம், முடுவார்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top