Close
ஏப்ரல் 24, 2026 12:37 காலை

அலங்காநல்லூரில் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினர் கைது

தமிழக முதல்வர் ஸ்டாலின் அதானி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த கேள்விக்கு சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வேறு வேலை இல்லை என்று அலட்சியமாக பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பாமகவினர் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில், பாமக நிறுவனர் ராமதாசை அலட்சியமாக பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து, இன்று காலை 12 மணி அளவில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

உடனே , அங்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறினர். இதனை யடுத்து, அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினரை கைது செய்து வேனில் ஏற்றினர் .
அப்போது கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் மருத்துவர் அய்யாவை தவறாக பேசிய தமிழக முதல்வர்  ஸ்டாலினை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டவாரே போலீஸ் வேனில்ஏறிச் சென்றனர்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாமகவினர் தமிழக முதல்வரை கண்டித்து அலங்காநல்லூர் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக , அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top