Close
மார்ச் 7, 2026 1:24 மணி

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் வாரந்தோறும் நடைபெறும் தூய்மை அருணை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.

தூய்மை அருணை திட்டத்திற்கு 4 மேற்பார்வையாளர்களும், 39 வார்டுக்கு 39 ஒருங்கிணைப்பாளர்களும், மாட வீதி தூய்மைப்பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும், ஒவ்வொரு வார்டுக்கும் 25 தூய்மைக் காவலர்கள் என ஆயிரக்கணக்காணோர் மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூர்வாருதல் என செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சி திருவள்ளுவா் சிலை அருகே தூய்மைப் பணியை அவா் தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டாா். மேலும், மாநகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணியின்போது, பெரியாா் சிலை அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் நிலையத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டதோடு, அண்ணா சிலை வரை தூய்மை பணியில் ஈடுபட்டாா்.

பெரியார் சிலை அருகில், கிருஸ்துவ தேவாலாயம் அருகே நடைபெற்று வரும் தூய்மை பணி மற்றும் கால்வாய் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, தூய்மைபணியில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுடன் தேநீர் அருந்தி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கீழே உள்ள சேதமடைந்திருக்கும் பீடத்தினை பார்வையிட்டு, அதை சீரமைக்கும் பணிக் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

ஒவ்வொரு வார்டிலும் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு அங்கு தூய்மை பணியில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பெண்களிடம் நலம் விசாரித்து, அவர்களை ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் தூய்மை மேற்பாா்வையாளா்கள் அண்ணாதுரை எம்.பி., திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மாநகரச் செயலா் காா்த்திவேல்மாறன், தூய்மை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், அரசு வழக்குரைஞா் சீனுவாசன், குணசேகரன், முருகையன், ப்ரியா விஜயரங்கன், துணை மேயர் ராஜாங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் மெட்ராஸ் சுப்பிரமணி, காலேஜ் ரவி, காளிதாஸ், குட்டி புகழேந்தி , சண்முகம், பி.ஆர்.நாகராஜ், குமார், மண்டி. பிரகாஷ், கருணாமூர்த்தி, , ஜீவரேகா விஜயராஜ், அருணை. வெங்கட் உட்பட ஆயிரக்கணக்கான தூய்மைக் காவலர்களும் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடன் அமா்ந்து அமைச்சா் எ.வ.வேலு தேனீா் அருந்தினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top