நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வருகிற 5ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளை (மிலாடி நபி) முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்




