Close
மார்ச் 7, 2026 3:17 மணி

டிராக்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

டிராக்டர்க்ளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ள மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர், நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி விதிப்பால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் டில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளித்தும், சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்தும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக விவசாயிகள் வேளாண்மை பணிக்கு பயன்படுத்தும் டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகளுக்கு 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு வகைகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்திற்கு முழு வரி விலக்கு அளிக்ககப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கான சிமெண்டிற்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் வரி குறைப்பு செய்துள்ளதை, விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top