Close
ஏப்ரல் 23, 2026 10:02 மணி

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து 10ம் தேதி நாமக்கல்லில் பயிற்சி

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து, வருகிற 10ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியில் நிலையத்தில் (கேவிகே) வருகிற 10ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, திலோப்பியா மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மீன்பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைத்தல், மீன்குஞ்சு தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், மேலும் மாநில, மத்திய அரசுகளின் மீன் வளர்ப்புக்குரிய மான்யம் குறித்தும், பயிற்சியில் விரிவாக கற்றுத்தரப்படும்.

இப்பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 7358594841, மற்றும் 04286 266345 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு முன்பதிவு செயதுகொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top