தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த 1859ம் ஆண்டு, மெட்ராஸ் மாவட்ட காவலர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் செப். 6ம் தேதி, தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற காவலர் தின விழாவில், சாலை பாதுகாப்பு, சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
நாமக்கல் எஸ்.பி., விமலா தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், சாலை பாதுகாப்பு, சைபர் குற்றம் ஏற்பட்டால் எவ்வாறு தொடர்பு கொள்வது, போலீசார் பயன்படுத்திய சீருடைகள், போலீஸ் வாகனங்களின் போட்டோக்களும் இடம் பெற்றிருந்தன.
மேலும், போலீசார் பயன்படுத்திய பழைய துப்பாக்கி முதல் நவீன துப்பாக்கிகளும், பாதுகாப்பு உடைகள், புல்லட்களும் வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியை பார்க்க வந்த பொதுமக்களுக்கு, ஒவ்வொரு துப்பாக்கியின் செயல்பாடுகள், குற்றச் சம்பவங்கள் நடந்தால் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்து விளக்கப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்விஜயராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர்வெங்கடாசலம் மற்றும் திரளான காவல்துறையினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




