Close
ஏப்ரல் 23, 2026 10:00 மணி

நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ. சங்கம் காத்திருப்பு போராட்டம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் தாலகா ஆபீஸ் முன்பு, விஏஓக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக முன் நடந்த போராட்டத்திற்கு, விஏஓ சங்க தாலுகா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் குமார் வரவேற்றார். சங்க மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார்.

கிராம நிர்வாகத்தில் முதுகெலும்பாக திகழும் வி.ஏ.ஓ., அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இண்டர்நெட் வசதியுடன் நவீனமயமாக்கம் செய்யவேண்டும்.

விஏஓக்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என, மாற்றி அமைக்க வேண்டும்.

பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு, தேர்வுநிலை வி.ஏ.ஓ., எனவும், 20 ஆண்டு பணிமுடித்த வி.ஏ.ஓ.,க்களுக்கு சிறப்பு நிலை வி.ஏ.ஓ. எனவும் பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவு வெளியிட வேண்டும்.

தேர்வுநிலை வி.ஏ.ஓ.,க்களுக்கு, முதுநிலை ஆர்.ஐ., நிலையில் சம்பளமும், சிறப்பு நிலை வி.ஏ.ஓ.,க்களுக்கு, துணை வட்டாட்சியர் நிலையில் சம்பளமும் வழங்க வேண்டும்.

நகர் குளம் பட்டா மாறுதலில், வி.ஏ.ஓ.,க்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top