Close
மார்ச் 7, 2026 1:47 மணி

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் பணியாளர் நாள் நிகழ்ச்சி வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதவாது:

தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரின் உத்தரவின்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மண்டலத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை, 2வது வெள்ளிக்கிழமை, மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த பணியாளர் நாள் நிகழ்ச்சி வருகிற செப். 12ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் உள்ள, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் பணியாளர் நாள் கூட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top