Close
ஏப்ரல் 23, 2026 10:02 மணி

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை,   இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ்,  வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை,  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை,  உதவி உபகரணங்கள், சாலை வசதி,  வேளாண் பயிா்க் கடன், தாட்கோ, கடனுதவி, புதிய நீா்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 566  மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு   நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக  நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும்    பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்    இராம்பிரதிபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி  அம்ருதா எஸ்.குமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்  சண்முகப்பிரியா மற்றும் அனைத்து துறைச்சார்ந்தஅரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்யார்

மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 66 மனுக்களும்,

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்   70  மனுக்களும் பெறப்படு நடவடிக்கை   மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை  அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் செய்யார் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மதுக்கடையை அகற்றக் கோரி  மனு

ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆரணி புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலையான காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் மனு அளித்தனா்.

அந்த மனுவில், ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையால் தினசரி பயணிகள், பெண்கள், மாணவா்கள், மூத்த குடிமக்கள் பெரும் சிரமத்தை எதிா்கொள்கின்றனா். மது போதையில் அடிக்கடி தகராறு, பள்ளி மாணவிகளை சீண்டுதல் என பொதுமக்களின் அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே, அந்தக் கடையை அங்கு இருந்து அகற்றவேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.

கோட்டாட்சியரிடம் மனு அளித்த தவெக நிர்வாகிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top