30 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு, நாமக்கல்லில் 108 பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாநில அளவில் 6000க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் தொழிலாளர்கள், இரவு பகலாக 2 ஷிப்டு முறையில், சட்டவிரோதமாக நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை நேரம் உழைத்து வருகின்றனர்.
தமிழக அரசு 2025-2026 ஆண்டிற்கான வருடாந்திர ஊதிய உயர்வை 108 ஆம்புவள்ஸ் தொழிலாளர்களுக்கு வழங்கியபோதும், இச்சேவையை ஏற்று நடத்தி வரும் தனியார் நிர்வாகம் அந்தொகையை முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்காமல், கடந்த ஆண்டு வழங்கிய ஊதிய உயர்வான, 16% சதவீதத்திலிருந்து குறைத்து 10% சதவீதமாக வழங்கியுள்ளது. தமிழக அரசும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை கண்டிக்காமல் இருந்து வருகிறது.
இதைக்கண்டித்து, நாமக்கல் பார்க் ரோட்டில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
விலைவாசி உயர்வைக் கணக்கிட்டு, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வருகிற அக். 18ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொள்வதென்று முடிவு செய்யப்பட்டது.
போராட்டத்தில் திரளான 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.




