Close
மார்ச் 7, 2026 4:17 மணி

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 1,541 வழக்குகள் ரூ. 14.47 கோடி மதிப்பில் தீர்வு

நாமக்கல்லில் நடைபெற்ற லோக் அதாலத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட தலைமை நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் இழப்பீடு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.14 கோடியே 47 லட்சத்து 54 ஆயிரம் கோடி மதிப்பில், 1,541 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்தார். நீதிபதிகள் முனுசாமி, சண்முகபிரியா, பிரவீணா, பிரபாசந்திரன், மகாலட்சுமி மற்றும் சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதுபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதன்படி நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் என, மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,195 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதில் 1,541 வழக்குகள் வழக்குகளுக்கு ரூ.14 கோடியே 47 லட்சத்து 54 ஆயிரத்து 940 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி உத்தரவின் பேரில், மாவட்ட நீதிபதி பாலகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வேலுமயில் ஆகியோர் லோக் அதாலத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top