Close
மார்ச் 7, 2026 1:42 மணி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற, சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார்.

நாமக்கல்லில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி ஆகியேர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரியார் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையில் அனைவரும் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், மாநில திமுக நிர்வாகிகள் மாயவன், வக்கீல் இளங்கோவன், நாமக்கல் மாநகர துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் உள்ளிட்ட திரளானவர்கள்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top