Close
மார்ச் 7, 2026 4:26 மணி

புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர்

நியாய விலை கடையில் சிறந்து வைத்து பொருட்களை வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை வட்டம் எலிக்குத்தி கிராமத்தில் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும், பறையம்பட்டு கிராமத்தில் ரூ.13.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும் என ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய நியாய விலை கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் , நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.

குறிப்பாக மகளிர் தங்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், உயர் கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது.

2006 – 2011 ஆட்சி காலத்தில் நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த பொழுது அன்றைய முதலமைச்சர் கருணாநிதி விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தியதன்படி அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.

நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக எலக்ட்ரானிக் தராசு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அப்பொழுது 3 கிலோ மீட்டார் தொலைவிற்கு ஒரு நியாய விலைகடை என்ற அடிப்படையில் ஒரே நியாய விலைக்கடைகளில் 3000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருந்ததால் மக்களுக்கு பொருட்கள் வழஙகுவதில் சிரமம் இருந்ததை அறிந்து 1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக்கடை மக்களுக்காக செயல்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்பொழுது திராவிட மாடல் ஆட்சியில் 150 அட்டைகளுக்கு ஒரு பகுதி நேர நியாய விலைக்கடை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது போன்று மக்கள் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் கிராமப்புர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து கிராம சாலைகள் மேம்பாடு சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி எலிக்குத்தி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.58.90 இலட்சம் மதிப்பீட்டில் மக்களுக்கு வீடு கள் கட்டித்தரப்பட்டுள்ளது, மேலும் ரூ. 40.54 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமளர்ச்சி திட்டத்திலும், ரூ.85.17 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைப்வாய்ப்பு திட்டத்திலும் ரூ.36.09 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலும் , ரூ .44.11 இலட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் கிராம சாலை திட்டத்திலும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 18.42 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ. 4.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் இப்பகுதி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது எலிக்குத்தி மற்றும் பறையம்பட்டு கிராம பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலைக்கடைகளை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என பேசினார் .

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இரா.மணி, கூட்டுறவு துணைப்பதிவாளர் வினோத், மாவட்ட வழங்கல் அலுவலர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top