Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்  செய்து வருகின்றனர்.

கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்தநிலையில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி பௌர்ணமி வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.53 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது சிறந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புரட்டாசி பௌர்ணமி

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பௌர்ணமி வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளின் அடிப்படையில் அதன் சிறப்புகள் மட்டுமின்றி, வழிபாட்டு பலன்களும் மாறுபடும்.

புரட்டாசி மாத பௌர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது புரட்டாசி மாத பௌர்ணமி ஆகும்.

புரட்டாசி பௌர்ணமி தினத்தை ‘பாகுளி’ என்றும் அழைப்பார்கள். இந்த நாளில் சிவனை வழிபட்டால், துன்பங்கள் நம்மை நெருங்காது.

புரட்டாசி பௌர்ணமி அன்று காலையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறவிகளில் செய்த பாவங்கள் மட்டுமின்றி, இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.

புரட்டாசி பௌர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள்.

இந்நாளில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நன்மைகள் கிடைக்கும் மற்றும் சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

புரட்டாசி பௌர்ணமி நாளில் தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும், தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள் என்பது ஐதீகம். அதனால் புரட்டாசி பௌர்ணமியில் அம்பிகையை நினைத்து தியானம் செய்வது, அபிராமி அந்தாதி போன்ற பாடல்கள் பாடுவது, அம்பிகையை வழிபடுவது, சிவனை நினைத்து கிரிவலம் வருவது போன்றவை சிறப்புடையதாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top