புதன்சந்தை பகுதியில் வரும் 19ம் தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதகிளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 19ம் புதன்கிழமை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார சப்ளை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




