Close
மார்ச் 7, 2026 12:59 மணி

முப்படை வீரர்களுக்கு தாராளமாக கொடிநாள் நிதி வழங்க கலெக்டர் வேண்டுகோள்

முப்படை வீரர்களின் நலனுக்காக, பொதுமக்கள் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நமது நாட்டின் எல்லைகளை காத்திடும் வகையில், கடும் குளிரிலும், வெப்பத்திலும், இயற்கை இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, இரவு பகல் பாராமல் பணியாற்றிய முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில், ஆண்டு தோறும், டிச.7ம் தேதி படைவீரர் கொடி நாளாக, நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழங்கும் கொடிநாள் நிதி, உடல் உறுப்புகளை இழந்த படைவீரர்களின் மறுவாழ்வுக்கும், முன்னாள் படைவீரர்களின் நலன் மற்றும் குடும்ப நல்வாழ்விற்கும், மேம்பாட்டிற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
தியாக சுடர்களாக விளங்கும் முப்படை வீரர்களின் நலன்காக்க, திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தாராளமாக, ஃபிளாக்டே.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top