நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ. சார்பில், சட்டமேதை அம்பேக்கரின் நினைவு தினம், நாமக்கல்லில் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் தமிழரசு முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராம்குமார், பொருளாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாநகர தலைவர் தினேஷ், பிரபு, சுகன்யா உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., அலுவலர் நல சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில இணை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மஞ்சநாதன், செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் நாகராஜன், துணைத்தலைவர் ஜெகதீசன், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.




