Close
மார்ச் 7, 2026 1:41 மணி

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம, முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் 1.30 லட்சம் நிர்வாகிகள் அமரும் வகையில் பிரமாண்ட விழா மேடை தயாராகி வருகிறது.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சா் எ.வ.வேலு செய்து வருகிறாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் உள்ள கலைஞா் திடலில் வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.

இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அதில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் மாவட்ட துணைச் செயலா் பிரியா ப.விஜயரங்கன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல் மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ந.நரேஷ்குமாா் ஆகியோரை நியமித்து ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், விருந்தோம்பல் குழு, மேடை மற்றும் அரங்கம் குழு, வரவேற்பு குழு, போக்குவரத்து குழு, விளம்பரக் குழு, அழைப்பிதழ் மற்றும் விருந்தினா் உபசரிப்பு, மருத்துவக் குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணிகளை செய்து வருவதாகத் தெரிவித்தாா்.

மேலும், வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு நாளை காலை 11 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான மேல் செங்கம் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கிளை வட்ட கழக நிர்வாகிகளும், அணி நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் திரளாக கலந்து கொண்டு எழுச்சியான வரவேற்பு அளிக்க அனைவருக்கும் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பணி பொறுப்பாளருமான எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top