Close
ஏப்ரல் 23, 2026 10:02 மணி

நாமக்கல்லில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு தேவையான இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதன் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெல் நிறுவனத்தின் தொழில் நுட்ப அலுவலர்கள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி முன்னிலையில், தமிழக இவிஎம் இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி பார்வையாளரும், பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையருமான எஸ்.எஸ் .ஃபால், இவிஎம் இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, இவிஎம் சரிபார்க்கும் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் எவ்வித தடைகளுமின்றி வாக்கு செலுத்தும் வகையில் சரிபார்ப்பு பணியினை கவனமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.

இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் மேற்பார்வையில், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்ர்கள், ஆர்ஐக்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 100 மணியாளர்கள்  தொடர்ந்து 22 நாட்கள் ஈடுபட உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top