Close
மார்ச் 7, 2026 4:26 மணி

சோலார் பேனல் அமைப்பதன் மூலம் 60 சதவீதம் மின் கட்டணம் சேமிக்கலாம்: கலெக்டர் தகவல்

வீடுகளில் அரசு மானிய உதவியுடன் சோலார் பேனல்கள் அமைத்து, 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேசினார்.

தமிழக மின் பகிர்மான கழகம் சார்பில், பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ், சோலார் பேனல் விற்பனையாளர்களுக்கு, 9-வது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: மத்திய அரசின் திட்டமான சோலார் மின் திட்டம், வீட்டு மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்பில் உள்ள மின் நுகர்வோர், சோலார் மின் தகடுகள் அமைத்து அதன் மூலம் மின் பயன்பாட்டை குறைப்பதற்கு வழிவகை செய்கிறது.

சராசரியாக, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ. 1,200 மின் கட்டணம் செலத்தும் நுகர்வோர், இத்திட்டத்தின் கீழ், ஒரு கி.வாட்-க்கு மின் சோலார் தகடுகள் பொறுத்தும்போது, சுமார் 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம். வீடுகளில் ஒரு கி.வாட் சோலார் மின் தகடுகள் பொறுத்துவதற்கு ரூ. 80,000 வரை செலவாகும். செலவீனத்தில், ஒரு கி.வாட்டிற்கு ரூ. 30,000 வரை அரசு மானியம் பெறலாம். இரண்டு கி.வாட் மின் தகடுகள் பொறுத்துவதற்கு, ரூ. 1.40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதில், ரூ. 60,000 வரை மானியம் பெறலாம்.

சோலார் மின் உற்பத்தி தகடுகள் 27 ஆண்டுகள் வரை உத்திரவாத்த்துடன் செயல்படக்கூடியது. அதனால், இத்திட்டத்தில் நீண்ட காலத்திற்கு பயன்பெறலாம். ஒரு கி.வாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி தகடுகள் நாளொன்றுக்கு, 4 முதல், 5 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று கூறினார்

தமிழக பசுமை எரிசக்தி கழக இயக்குனர் இயக்குநர் மங்களநாதன், கரூர் மண்டல செயற்பொறியாளர் கனிகை மார்தல், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top