திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாா்கழி பெளா்ணமி விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டாா்.
அருணாசலேஸ்வரா் திருக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகவும் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் வருவதற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி மற்றும் முக்கிய தினங்களில் வருகை தருகின்றனர்.
அதன்படி வருகின்ற 02.01.2026 அன்று மார்கழி மாத பௌர்ணமி மாலை 06.11 மணியளவில் தொடங்கி, மறுநாள் 03.01.2026 சனிக் கிழமை மாலை 04.07 முடிவடைகிறது. மேலும் 03.01.2026 அன்று திருக்கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் ஆருத்ரா தரிசனத்தில் அருள்மிகு நடராஜர் பெருமானுக்கு திருக்கார்த்திகை தீப மை சாற்றுதல் மற்றும் காலை 10 மணிக்கு மேல் மாடவீதியில் வீதியுலா உற்சவம் நடைபெறவுள்ளது.
இந்நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மின் வசதி, பேருந்து வசதி மற்றும் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் மருத்துவ முகாம்கள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் தலைமை வகித்து அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:
- பௌா்ணமி நாளில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கிரிவலப்பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.
- போக்குவரத்துத்துறை சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை சாா்பில் உணவகம் மற்றும் அன்னதான கூடங்களில் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறா என்று ஆய்வு செய்யவேண்டும்.
- சமூக நலத்துறை சாா்பில் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- கழிப்பறைகளை தொடா்ந்து சுத்தம் செய்யவேண்டும். கிரிவலப்பாதை தூய்மையாக பராமரிக்க தேவையான தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கவேண்டும்.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கா்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் ஆகியோா் சிரமமின்றி சுவாமி தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- காவல் துறை சாா்பில் போதுமான காவலா்களை நியமிக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை அய்வு செய்து, குடிநீா் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்ய தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
மேலும், கோயில் மற்றும் மாடவீதிகளில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்படுத்தப்பட்ட, வரிசையையும் பாா்வையிட்டு ஆக்கிரமிப்புகள் வராத வண்ணம் கண்காணிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், கோயில் அலுவலா்கள், போக்குவரத்துத் துறையினா் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.




