திருவண்ணாமலை மாவட்டம் போளூா் வட்டம், கேளூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், மாவட்ட வழங்கல் அலுவலா் சதிஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், முகாமினை துவக்கி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிராமபுறங்களில் சிறு வயது திருமணங்களை நடத்தி வைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். பெண் பிள்ளைகளை கல்வி கற்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும்,
மேலும் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், சிறு, குறு விவசாசி சான்றிதழ், தோட்டக்கலைத் துறை,வேளாண் துறை மற்றும் இதர துறைகளின் சாா்பில் 139 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, மாவட்ட வழங்கல் மற்றும் ம.சதிஸ்குமார், திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலன்) கலைச்செல்வி, துணை ஆட்சியர் (பயிற்சி) சந்தோஷ் குமார், போளூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




