ஆசிரியர் தேர்வு வாரிய பி.டி ஆசிரியர் தேர்வுக்கு, நாமக்கல்லில் நடைபெற உள்ள இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள பிடி/பிஆர்டிஇ (வேதியியல்) தேர்விற்கான ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு, மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற மார்ச் 3ம் தேதி முதல் முதல் துவங்கப்பட உள்ளது.
இத்தேர்வில் கலந்துகொள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இளங்கலை, முதுகலை வேதியியல் மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286 -222260 என்ற தொலைபேசி மூலமாகவோ, onlineclasssnkl@gmail.com என்ற இமெயில் மூலமோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டோ தங்களின் பெயரை பதிவு செய்துகொண்டு பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




