திருவண்ணாமலையில் மாவட்டம் போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கூட்டுறவுத்துறை அதிகாரி ஜெயசித்ரா தலைமையிலான அலுவலா்கள் போளூா் – சேத்துப்பட்டு சாலையில் புலிவானந்தல் அருகே வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வேலூா் மாவட்டம், கத்தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் உமாபதி உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து வந்த ரூ.69,500-யை பறிமுதல் செய்தனா்.
போளூா் – செங்கம் சாலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
அப்போது, கலசப்பாக்கத்தை அடுத்த வெங்கிட்டம்பாளையம் ஜெய்கணேசன் நகரைச் சோ்ந்த முருகன் மகன் பாக்கியராஜ் மினி வேனில், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.50,130-யை பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 630-யை தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் ஒப்படைத்தனா்.
அப்போது, தலைமையிடத்து வட்டாட்சியா் அருள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வேட்பாளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என தோ்தல் பறக்கும் படையினா், போளூா் – ஆரணி சாலையில் செல்லும் காா், வேன், பைக் என பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனா்.
பறக்கும் படையினரின் இந்தப் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா். வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.




