Close
ஜூன் 28, 2026 12:02 காலை

திருவண்ணாமலை ஆனி பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்தநிலையில் ஆனி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஆனி பௌர்ணமி வருகிற 29-ம் தேதி (திங்கள் கிழமை) அதிகாலை 4.21 மணிக்கு தொடங்கி மறுநாள் 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6.10 மணிக்கு நிறைவடைகிறது. 29-ம் தேதி கிரிவலம் செல்வது சிறப்பானதாகும்.

திருவண்ணாமலையில் மாதம்தோறும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. அதன்படி, ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுதினம் (29ம் தேதி) அதிகாலை 4.21 மணிக்கு தொடங்கி, வரும் 30ம் தேதி அதிகாலை 6.10 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, கிரிவலம் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் ஆய்வு நடத்தினார். அண்ணாமலையார் கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம், தேரடி வீதி, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.

மேலும், தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் இடையூறு இல்லாமல் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சிறப்பு மெமு ரெயில்

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரத்தில் இருந்து ஜூன் 29-ந் இருந்து ஜூன் 29-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரெயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரெயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.

8 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு மெமு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழபட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top