தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து இன்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவை சேர்ந்த முகமது சலீம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மருத்துவமனை கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினர்.
தென்காசி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போதிலும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை தற்போது தொடர்கிறது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஸ்கேன் ஆபரேட்டர்களை மிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்




