Close
ஆகஸ்ட் 27, 2026 8:15 மணி

கோவில்களில் செல்போன் எடுத்துசெல்ல தடை ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு செய்தார். கோவில்களில் செல்போன் எடுத்துசெல்ல தடை ஏன்?- என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விரிவாக விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ் பேசியதாவது: அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும் விதமாகப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் மூலம் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணி முழுமையடைந்தால், தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரிசனம் செய்யக்கூடிய நிலை ஏற்படும். அப்போது தான் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றார்.

தமிழகத்தில் உள்ள முதன்மையான கோயில்களில் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் அமைதிக்காகவும், கோயில்களில் உள்ள சிற்பங்களைக் கண்டு ரசிப்பதற்காகவும் வருகை தருகிறார்கள். ஆனால், சிலர் அவர்களது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக செல்போன்களை எடுத்துவந்து படம் எடுப்பதும், ரீல்ஸ் செய்வதும் அதிகரித்து வருகிறது.

இதனால், ஆன்மிக நம்பிக்கையுடன் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதால், தற்போது தமிழகத்தில் உள்ள முதன்மையான கோயில்களில் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மாட வீதிகளி ல் தற்பொழுது பக்தர்கள் அதிக அளவில் வருகைக்காக குடியிருப்புகள் அனைத்தும் ஹோம் ஸ்டேவாக மாறி வருகிறது, இது குறித்த கேள்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச உள்ளதாகவும், மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் இணைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார்

வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக உதவும் வகையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கோவில் வளாகத்துக்குள் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க கூடுதல் மருத்துவர்களும் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வரிசையை மேலும் மேம்படுத்துவது குறித்து கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளூர் மக்களுக்கு தரிசனத்திற்கு தனி வரிசை அல்லது தினசரி தனி நேரம் ஒதுக்கவேண்டும், திருவண்ணாமலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ரயில்வே ஜங்ஷன் அமைத்து தர வேண்டும் , அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளையும் ஆன்லைன் பதிவு செய்து விரைவு தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும்,

கிரிவலப் பாதையில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி மீண்டும் கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கணேசன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் கோரிக்கை மனு அளித்தார்.

நிகழ்வில் மாநில செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், மாநில சட்ட ஆலோசகர் குமரன் மாவட்ட தலைவர் ஏழுமலை, சிவரவி, சுதாகர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top